என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் நிலையத்தில் வாலிபர் மர்ம மரணம்- மனித உரிமை ஆணையம் வழக்கு
Byமாலை மலர்25 Dec 2018 4:38 AM GMT (Updated: 25 Dec 2018 4:38 AM GMT)
சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. #EsplanadePoliceStation
சென்னை:
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). மாற்றுத்திறனாளியான இவர் பிராட்வேயில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.
அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் கடந்த 19-ந்தேதி 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமார், அவரது நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரை கடந்த 20-ந்தேதி அதிகாலை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் போலீஸ் காவலில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி மீனாகுமாரி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இதுதொடர்பாக மனித உரிமை ஆணைய போலீசார் விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார். #EsplanadePoliceStation
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). மாற்றுத்திறனாளியான இவர் பிராட்வேயில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.
அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் கடந்த 19-ந்தேதி 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமார், அவரது நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரை கடந்த 20-ந்தேதி அதிகாலை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் போலீஸ் காவலில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மனித உரிமை ஆணைய போலீசார் விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார். #EsplanadePoliceStation
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X