என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்10 Dec 2018 10:51 AM GMT (Updated: 10 Dec 2018 10:51 AM GMT)
நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் விடுப்பு கொடுக்காததால் மனவேதனை அடைந்த போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது30). இவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது சகோதரி குழந்தைக்கு இன்று காது குத்தும் விழா நடக்கிறது. அந்த விழாவில் தாய் மாமன் சடங்கு செய்வதற்காக வெங்கடேசை அழைத்திருந்தனர். அதற்கு செல்ல இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் வெங்கடேஷ் 3 நாள் விடுப்பு கேட்டிருந்தார். அதற்கு அவர் விடுப்பு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் வெங்கடேஷ் மனவேதனை அடைந்தார். இன்று காலை போலீஸ் நிலையத்தின் மாடிக்கு சென்ற அவர் அங்கு கிடந்த டியூப் லைட்களை உடைத்து உடலில் கிழித்து கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த மற்ற போலீசார் வெங்கடேசை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேசை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரரை போட்டோ எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். உடனே போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்தனர். இதையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது30). இவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது சகோதரி குழந்தைக்கு இன்று காது குத்தும் விழா நடக்கிறது. அந்த விழாவில் தாய் மாமன் சடங்கு செய்வதற்காக வெங்கடேசை அழைத்திருந்தனர். அதற்கு செல்ல இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் வெங்கடேஷ் 3 நாள் விடுப்பு கேட்டிருந்தார். அதற்கு அவர் விடுப்பு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் வெங்கடேஷ் மனவேதனை அடைந்தார். இன்று காலை போலீஸ் நிலையத்தின் மாடிக்கு சென்ற அவர் அங்கு கிடந்த டியூப் லைட்களை உடைத்து உடலில் கிழித்து கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த மற்ற போலீசார் வெங்கடேசை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேசை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரரை போட்டோ எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். உடனே போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்தனர். இதையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X