என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை திருத்திய பெண்
Byமாலை மலர்23 Aug 2018 6:50 AM GMT (Updated: 23 Aug 2018 6:58 AM GMT)
கொடுமுடி மடேஸ்வரர் கோவிலில் இன்று தாலி கட்டும் நேரத்தில் பெண் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்தை திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடுமுடி:
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இன்று திருமண முகூர்த்த நாள் என்பதால் பரப்பரப்பாக காணப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று இருவருக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு கொடுமுடி கோவிலில் ராகு-கேது பரிகாரம் செய்யப்பட்டது. பிறகு திருமணத்துக்காக மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்திருந்தார்.
திருமணத்துக்கு பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர். மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முயன்றார். அப்போது மணப்பெண் மாப்பிள்ளையை தாலி கட்ட விடாமல் கையை பிடித்து தட்டி விட்டார். இதனால் மாப்பிள்ளை மற்றும் இரு வீட்டார் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
‘‘மாப்பிள்ளை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் வேண்டாம்’’ என்றார் மணப்பெண். இதையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் இன்று திருமண முகூர்த்த நாள் என்பதால் பரப்பரப்பாக காணப்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 34). இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக கடந்த 2 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று இருவருக்கும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் நடப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு கொடுமுடி கோவிலில் ராகு-கேது பரிகாரம் செய்யப்பட்டது. பிறகு திருமணத்துக்காக மாப்பிள்ளை மணமேடையில் அமர்ந்திருந்தார்.
திருமணத்துக்கு பெண்ணை அழைத்து வந்து அமர வைத்தனர். மாப்பிள்ளை மணமகள் கழுத்தில் தாலி கட்டுவதற்காக முயன்றார். அப்போது மணப்பெண் மாப்பிள்ளையை தாலி கட்ட விடாமல் கையை பிடித்து தட்டி விட்டார். இதனால் மாப்பிள்ளை மற்றும் இரு வீட்டார் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
‘‘மாப்பிள்ளை எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் வேண்டாம்’’ என்றார் மணப்பெண். இதையடுத்து இரு வீட்டாரும் கலந்து பேசி திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X