search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவ சேவையில் தமிழகம் முன்னிலை - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்
    X

    மருத்துவ சேவையில் தமிழகம் முன்னிலை - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

    மருத்துவ சேவையில் தமிழகம் முன்னிலை உள்ளது என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். #Medicalservice

    வேலூர்:

    வி.ஐ.டி.யில் நடைபெறும் பயோமெட் 2018 என்கிற உயிர் மூலப் பொருட்கள் உயிர் பொறியியல் மற்றும் நோய் கண்டறிந்து சிகிச்சையளித்தல் பற்றிய நாள் சர்வதேச மாநாட்டினை தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இதில் உயிர் மூலப் பொருட்கள் மற்றும் செயற்கை உறுப்பு ஆராய்ச்சிக்கான சி.பி.சர்மா விருது அமெரிக்கா நாட்டின் டியூக் பல்கலைகழக பேராசிரியர் அசுதோஷ் சிலிகோட்டிக்கு வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வழங்கினார். கானா நாட்டின் துணை தூதுவர் மைக்கேல் ஆரூன் என்.என்.ஒக்வே பங்கேற்று பேசினார்.

    வி.ஐ.டி. பயோ மெடிக்கல் செலுலார் மற்றும் மாலிகுலர் தெரனாஸ்டிக்ஸ் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் சரவதேச அளவில் ஜப்பான் இத்தாலி அமெரிக்கா, கனடா, போலந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் மருத்துவர்கள் தொழில் நிறுவன வல்லுநர்கள் பங்கேற்றனர்.

    வி.ஐ.டி.யில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்ற மாநாடு தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை மாநாடு அமைப்பு குழு தலைவர் முனைவர் கீதாமணிவாசகம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் முனைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    சர்வதேச அளவில் இது போன்ற மாநாட்டுளை அரசு சார்ந்த அமைப்புகள் நடத்துவதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. வி.ஐ.டி.யில் இது போன்ற மாநாடுகள் நடத்துவது வரவேற்கதக்கது.

    தேசிய அளவில் தரமான மருத்துவ சேவை அளிப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மகப்பேறு மருத்துவம் குழந்தை நலம் தொற்று நோய் தடுப்பு ஆகியற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி பணிகளை முடிக்க அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் மருத்துவ ஆராய்ச்சியின் பலன் மக்களை சென்றடைவதில் அதிக காலம் ஆகிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்களுடனும் மருந்து தொழில் நிறுவனஙகளுடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் ஆராய்ச்சிக்கு கால விரயம் ஏற்படுவதை தடுக்க முடியும்.

    நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி. வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து உயிர் மூலப் பொருட்கள் மற்றும் செய்கை உறுப்புகள் ஆராய்ச்சி பணியில் சாதனை படைத்தமைக்காக அமெரிக்கா நாட்டின் டியூக் பல்கலைக்கழக பேராசிரியர் விஞ்ஞானி அசுதோஷ் சில்கோட்டிக்கு சி.பி.சர்மா விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    வளர்ந்து வரும் நாடுகளில் மருத்துவம் முக்கிய பாடமாக உள்ளது. மருத்துவ கண்டுபிடிப்புக்கள் மக்களுக்கு பல்வேறு வகைளில் பயனளிக்க கூடியவை. நாட்டில் சுகாதாரமும் கல்வியும் வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு சுகாதாரம் அளிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாக உள்ளது.

    நிகழ்ச்சியில் பெங்களூர் நாராயணா நேத்ராலயா கண் மருத்துவமனை துணைத் தலைவர் டாக்டர் ரோஹித்ஷெட்டி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசினார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில் வி.ஐ.டி. இணைதுணை வேந்தர் முனைவர் நாராயணன் மாநாடு அமைப்பாளர்கள் மோகன்வர்மா, பேராசிரியை வீனாகவுல், அருனைநம்பிராஜ், அமித் ஜெயிஷ்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×