search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு புதுவை கோவில்களில் நாளை நடை அடைப்பு
    X

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு புதுவை கோவில்களில் நாளை நடை அடைப்பு

    சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை புதுவையில் உள்ள கோவில்களின் நடை சாத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் மறுநாள் சனிக்கிழமை பரிகார பூஜைக்கு பிறகு நடைகள் திறக்கப்படும்.
    புதுச்சேரி:

    சந்திரகிரகணம் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11.54 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 3.49 மணிக்கு முடிகிறது.

    இந்திய பகுதியில் நள்ளிரவு 12.59 மணிக்கு சந்திரன் முழுமையாக மறைந்து இருள் நிலை ஏற்படும். பின்னர், அதிகாலை 2.43 மணியளவில் இருள் நீங்கி சந்திரன் வெளிப்பட தொடங்கும்.

    பொதுவாக கிரகண நேரங்களில் தோ‌ஷம் ஏற்படுவதால் கோவில்களில் நடை சாத்தப்படும். சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை புதுவை கோவில்களின் நடை சாத்தப்படுகிறது.

    புதுவை அருகே உள்ள பஞ்சவடி கோவிலில் சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை மதியம் 1 மணி அளவில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் மீண்டும் மறுநாள் சனிக்கிழமை பரிகார பூஜைக்கு பின்னர் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும்.

    புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மறுநாள் காலை 6 மணிக்கு பரிகார பூஜையை தொடர்ந்து கோவில் நடை திறக்கப்படுகிறது.

    இதே போல் புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை வரதராஜ பெருமாள், முதலியார்பேட்டை வன்னிய பெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், பாகூர் மூல நாதசாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நாளை மாலைக்கு பிறகு நடை சாத்தப்பட்டு மீண்டும் மறுநாள் காலை திறக்கப்படுகிறது.
    Next Story
    ×