என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.ஏ.எஸ். ஆவதே எனது விருப்பம் - என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த கோவை மாணவி பேட்டி
Byமாலை மலர்28 Jun 2018 5:54 AM GMT (Updated: 28 Jun 2018 9:16 AM GMT)
என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளேன். எனது விருப்பம் ஐ.ஏ.எஸ். ஆவதே என்று கோவை மாணவி கீர்த்தனா ரவி கூறினார். #TNEA2018 #TNEARankList #TNEACutOff
கோவை:
கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் ரவி. என்ஜினீயர். இவரது மனைவி பாலம்பிகா. இவரது மகள் கீர்த்தனா ரவி (வயது 19). இவர் இன்று வெளியான என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளதால் என்ன படிக்க வேண்டும், எந்த கல்லூரியில் சேர வேண்டும் என்பதை எனது பெற்றோரிடம் கலந்து பேசி முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TNEA2018 #TNEARankList #TNEACutOff
கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் ரவி. என்ஜினீயர். இவரது மனைவி பாலம்பிகா. இவரது மகள் கீர்த்தனா ரவி (வயது 19). இவர் இன்று வெளியான என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியில் கடந்த வருடம் பிளஸ்-2 படித்து முடித்தேன். அதன் பின்னர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுழைவு தேர்வில் தமிழகத்தில் 2-ம் இடம் பிடித்தேன். அங்கு படிக்க முடியாமல் போனதால் டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் பி.எஸ்.சி. சேர்ந்தேன். அங்கு படிக்க விருப்பம் இல்லாமல் கோவைக்கு திரும்பினேன்.
அதன்பின்னர் எனது பெற்றோர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கோரினர். நானும் விண்ணப்பித்தேன். அதன்படி இன்று வெளியான பட்டியலில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது விருப்பம் ஐ.ஏ.எஸ். ஆவதே.
தற்போது என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளதால் என்ன படிக்க வேண்டும், எந்த கல்லூரியில் சேர வேண்டும் என்பதை எனது பெற்றோரிடம் கலந்து பேசி முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TNEA2018 #TNEARankList #TNEACutOff
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X