என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீவிபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் இயக்கம்
Byமாலை மலர்27 Jan 2017 5:55 AM GMT (Updated: 27 Jan 2017 5:55 AM GMT)
தீவிபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் இயக்கப்பட்டன. 1, 4 யூனிட்டுகளில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அனல்மின் நிலைய பகுதியில் உள்ள ஸ்விட்ச் யார்டில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தால் அனல் மின்நிலைய அனைத்து யூனிட்டுகளும் நிறுத்தப்பட்டன. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவற்றை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்தது.
இதைத் தொடர்ந்து 2, 3, 5-வது யூனிட்டுகள் நேற்று இயக்கப்பட்டன. 1, 4 யூனிட்டுகளில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது. அவற்றிலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த யூனிட்டுகள் அடிக்கடி பழுதடைவதாலும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாலும் இங்கு மின் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு அனல்மின் நிலைய பகுதியில் உள்ள ஸ்விட்ச் யார்டில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தால் அனல் மின்நிலைய அனைத்து யூனிட்டுகளும் நிறுத்தப்பட்டன. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவற்றை பழுது பார்க்கும் பணி தீவிரமாக நடந்தது.
இதைத் தொடர்ந்து 2, 3, 5-வது யூனிட்டுகள் நேற்று இயக்கப்பட்டன. 1, 4 யூனிட்டுகளில் பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது. அவற்றிலும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X