என் மலர்
செய்திகள்

தி.மு.க. ஆட்சி வந்ததும் நாகர்கோவில் நகரசபை மாநகராட்சியாக்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி
இதுதவிர உள்ளூர் பிரச்சினைகளையும் மக்கள் முன் வைத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.
குமரி மாவட்டத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆக்கப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். ஓட்டை உடைசல் அரசு பஸ்கள் மாற்றப்படும்.
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், பறக்கைபுத்தளம்தர்மபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.
மீன்பிடி துறைமுக பணிகள் செயல்படுத்தப்படும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கும் வகையில் ஹெலிகாப்டர்தளம் அமைக்கப்படும்.
குளச்சல் வர்த்தக துறைமுக பணிகள் தொடங்கப்படும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக்கப்படும். தெங்கம்புதூரில் போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.
இவை எல்லாம் நிறைவேற நீங்கள் தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.






