என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திண்டுக்கல்லில் மாடியில் இருந்து விழுந்த 2 மாத குழந்தை பலி
- கைக்குழந்தை என்பதால் தனது பெற்றோர் வீட்டில் இமாக்குலேட்ரூபி தங்கி இருந்தார்.
- முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி இமாக்குலேட்ரூபி (35). இவர்களுக்கு ஜெனோவா என்ற 2 மாத பெண் குழந்தை இருந்தது. கைக்குழந்தை என்பதால் ரோமன் மிஷன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இமாக்குலேட்ரூபி தங்கி இருந்தார்.
இந்த குழந்தையை நேற்று குளிக்க வைத்து அதன் உடலில் சூரிய ஒளி படும் வகையில் மொட்டை மாடியில் அவரது தாய் வைத்திருந்தார்.
அப்போது கை தவறி குழந்தை கீழே விழுந்தது. இதனால் அலறியடித்துக்கொண்டு தனது குழந்தையை இறங்கி வந்து தூக்கிய இமாக்குலேட்ரூபி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்