search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த 2 காதல் ஜோடிகள்
    X

    தஞ்சமடைந்த அபிஷேக்-அனுசியா.

    வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த 2 காதல் ஜோடிகள்

    • காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
    • காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    வடமதுரை:

    வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியை சேர்ந்தவர் அனுசியா(22). பி.எஸ்.சி பட்டதாரி. இவர் காசிபாளையம் பகுதியை சேர்ந்த அபிஷேக்(22) என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். என்ஜினீயரிங் படித்து வந்த அபிஷேக் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுவார்களோ என்று அச்சம் அடைந்தார்.

    இதனால் காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மணகோலத்தில் வேடசந்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.எஸ்.பி உத்தரவிட்டார்.

    போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்ய வேண்டாம் என எழுதி வாங்கி கொண்டு மணமக்களை அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு ஜோடி

    இதேபோல் வடமதுரை அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் செங்குளத்துப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி(18) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விபரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் விருப்பம் போல் வாழ பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×