search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீஞ்சூரில் கடைகளில் 197 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்- ரூ.12 ஆயிரம் அபராதம்
    X

    மீஞ்சூரில் கடைகளில் 197 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்- ரூ.12 ஆயிரம் அபராதம்

    • பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
    • முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பேரூராட்சி சார்பில் உதவி இயக்குனர் கண்ணன் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கினார்.

    பொன்னேரி:

    கொரோனா பரவலை தடுப்பதற்காக மீஞ்சூர் பேரூராட்சி பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பேரூராட்சி சார்பில் உதவி இயக்குனர் கண்ணன் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கினார்.

    மேலும் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில் கடைகளில் பயன்படுத்திய 197 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து டி.எச் சாலையில் முக கவசம் அணிய வேண்டும் என ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கிகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் சென்றனர்.

    Next Story
    ×