search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னேரி அருகே வீட்டு கழிவறைக்குள் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பு
    X

    பொன்னேரி அருகே வீட்டு கழிவறைக்குள் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பு

    • எங்கிருந்தோ வந்த சுமார் 10 அடி நீள சாரைப்பாம்பு திடீரென கழிவறைக்குள் புகுந்தது.
    • பாம்புபிடி நிபுணரான பண்டிக்காவனூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டை சேர்ந்தவர் யுவராஜ். இவரது வீட்டின் வெளியே கழிவறை உள்ளது.

    இந்த நிலையில் எங்கிருந்தோ வந்த சுமார் 10 அடி நீள சாரைப்பாம்பு திடீரென கழிவறைக்குள் புகுந்தது. இதனை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

    இதுகுறித்து பாம்புபிடி நிபுணரான பண்டிக்காவனூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் சாரைப்பாம்பு அங்கிருந்த சிறிய துளைக்குள் புகுந்தது.

    இதையடுத்து அந்த துளையின் அருகே இருந்த இரண்டு படிக்கட்டுகளை உடைத்தனர். மேலும் 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பாம்பை முத்துப்பாண்டியன் லாவகமாக பிடித்தார். அப்போது அந்த பாம்பு சீறியது. பார்ப்பவர்களை அச்சம் அடைய வைத்தது.

    பின்னர் பிடிபட்ட பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    Next Story
    ×