search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக மகளிர் குத்துச்சண்டை டெல்லியில் இன்று தொடக்கம்- 65 நாடுகளில் இருந்து 324 வீராங்கனைகள் பங்கேற்பு
    X

    உலக மகளிர் குத்துச்சண்டை டெல்லியில் இன்று தொடக்கம்- 65 நாடுகளில் இருந்து 324 வீராங்கனைகள் பங்கேற்பு

    • இந்தப் போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு தலா ரூ.82 லட்சம், வெள்ளிக்கு தலா ரூ.41 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது.
    • வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த 324 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 65 நாடுகளை சேர்ந்த 324 வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்றவர்கள் பங்கேற்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். இந்தியாவில் 3-வது முறையாக மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டியில் தங்கம் வெல்பவர்களுக்கு தலா ரூ.82 லட்சம், வெள்ளிக்கு தலா ரூ.41 லட்சம், வெண்கலத்துக்கு ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    அறுவை சிகிச்சை காரணமாக மேரிகோம் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. நீது கங்காஸ் (48 கிலோ), நிகாத் ஜரீன் (50 கிலோ), சாக்ஷி சவுத்ரி (52), பிரீத்தி (54), மனீஷா மவுன் (57), ஜாஸ்மின் லம்போரியா (60), சாஷி சோப்ரா (63), மஞ்சு பம்போரியா (66), சனமாசா சானு (70), லவ்லினா (75), சவீதி பூரா (81), நுபுர் ஷியோரன் (81 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு) ஆகிய இந்திய வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    கடந்த முறை இந்தியா 1 தங்கம் உள்பட 3 பதக்கம் பெற்று இருந்தது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேற்று நடந்தது.

    Next Story
    ×