என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் முன்னிலை பெறுவாரா? 7-வது சுற்றில் நாளை மோதல்
    X

    உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் முன்னிலை பெறுவாரா? 7-வது சுற்றில் நாளை மோதல்

    • 6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர்.
    • முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இப்போட்டி 14 சுற்றுகள் கொண்டதாகும். வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.

    முதலில் 7½ புள்ளிகளை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார். முதல் சுற்றில் டிங் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். 2-வது, 4-வது, 5-வது,6-வது சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

    6 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இன்னும் 8 சுற்றுகள் மீதமுள்ளது. குகேஷ்-டிங் லிரென் மோதும் 7-வது சுற்று போட்டி நாளை நடக்கிறது.

    பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கும் இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெள்ளைநிற காய்களுடன் விளையாடுகிறார். இதில் அவர் வெற்றி பெற்று முன்னிலை பெறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×