search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: ஒரு புள்ளியில் வெற்றியை நழுவ விட்ட தமிழ் தலைவாஸ்
    X

    புரோ கபடி லீக்: ஒரு புள்ளியில் வெற்றியை நழுவ விட்ட தமிழ் தலைவாஸ்

    • 9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும்.
    • பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.

    நொய்டா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி தற்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 50-வது லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு புல்சை எதிர்கொண்டது. இரு அணியினரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் ஒன்றிரண்டு புள்ளி வித்தியாசத்திலேயே போட்டி நகர்ந்தது.

    கடைசி 2 நிமிடம் இருக்கும் போது தலைவாஸ் 36-33 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அந்த திடமான முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள தவறினர். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து புள்ளிகளை திரட்டிய பெங்களூரு புல்ஸ் 38-37 என்ற புள்ளி கணக்கில் 'திரில்' வெற்றியை பெற்றது. பெங்களூரு அணியில் பாரத் 9 புள்ளியும், தலைவாஸ் அணியில் நரேந்தர் 12 புள்ளியும் எடுத்தனர்.

    9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும். சென்னையில் நடந்த லீக்கில் 4 ஆட்டங்களிலும் சறுக்கிய தமிழ் தலைவாசின் பரிதாபம் தொடருகிறது. பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.

    மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 51-42 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

    இன்றைய லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8 மணி), உ.பி. யோத்தாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×