search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தமிழக அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதி- ஸ்குவாஷ் போட்டியில் மேலும் 2 பதக்கம் உறுதி
    X

    தமிழக அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதி- ஸ்குவாஷ் போட்டியில் மேலும் 2 பதக்கம் உறுதி

    • குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.
    • கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    கேலோ இந்தியா விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டிகள் சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் தமிழகத்துக்கு ஒரு தங்கம், 4 வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்து இருந்தது.

    இந்த நிலையில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்துக்கு மேலும் 2 பதக்கம் உறுதியானது. ஆண்கள் அணிகள் பிரிவிலும், பெண்கள் அணிகள் பிரிவிலும் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    அரை இறுதியில் ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் அசாமையும், பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் ராஜஸ்தானையும் தோற்கடித்தன. இன்று மாலை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழக ஆண்கள் அணி உத்தர பிரதேசத்தையும், பெண்கள் அணி மாராட்டியத்தையும் எதிர்கொள்கிறது. தமிழக அணிக்கு 2 தங்கம் அல்லது 2 வெள்ளிப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    கோவையில் நடைபெற்று வரும் கூடைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் அணி லீக் ஆட்டத்தில் மராட்டியத்தை 72-67 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

    குத்துச்சண்டை அரை இறுதியில் தமிழகத்துக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. நவீன் குமார், கபிலன், துர்காஸ்ரீ, ஜீவா ஆகியோர் தோற்றனர். அரை இறுதியில் தோற்றதால் தமிழகத்துக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைக்கும்.

    Next Story
    ×