என் மலர்
விளையாட்டு

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய வீராங்கனை சஸ்பெண்ட்
- அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அவரது பயிற்சியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புது டெல்லி:
இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது மூன்றாவது டோப்பிங் வயலேஷன் ஆகும். இது அவரது 20 ஆண்டுகால கேரியருக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
அவரது பயிற்சியாளரும் தடைசெய்யப்பட்ட பொருள்களை விநியோகித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரியானாவைச் சேர்ந்த 42 வயதான சீமா புனியா 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் சாம்பியன் ஆவார். காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கம் வென்று இருக்கிறார்.
Next Story






