என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவில் முதன்முறையாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 73 பேர் கொண்ட அணி அறிவிப்பு
    X

    இந்தியாவில் முதன்முறையாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 73 பேர் கொண்ட அணி அறிவிப்பு

    • உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு இடம் பெறவில்லை.
    • அடுத்த மாதம் 27ஆம் தேதி போட்டி தொடங்குகிறது.

    இந்தியாவில் முதன்முறையாக டெல்லியில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக 73 பேர் கொண்ட வலுவான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    டோக்கியோ, பாரீஸ் ஒலிம்பிக்கில் முறையே வெண்கலம், வெள்ளி பதக்கம் வென்ற மற்றொரு உயரம் தாண்டுதல் வீரர் ஷரத் குமாரும் இடம் பெறவில்லை.

    டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

    மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார் ஆகியோர் தகுதித் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. தங்கவேலு அவருடைய டெக்னிக்கை மாற்றம் செய்துள்ளார். அதை பயன்படுத்த கொஞ்ச காலம் தேவை. எதிர்காலத்தில் மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×