என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    திருமணம் நின்றதாக அறிவித்த மந்தனா.. உடனே பலாஸ் வெளியிட்ட பதிவு
    X

    திருமணம் நின்றதாக அறிவித்த மந்தனா.. உடனே பலாஸ் வெளியிட்ட பதிவு

    • பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின.
    • இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

    மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

    இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா தற்போது, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவள் நான் இல்லை. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்; நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் பலாஸ்-உம் தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "எனக்கு எதிராக வரும் வதந்திகளை உண்மை என்று நம்பும் மக்களைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வெறும் ஊகங்களின் அடிப்படையில் ஒருவர் மீது முடிவெடுப்பது சரியல்ல" என்று அவர் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

    அதேநேரம் "என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் ஆதாரமற்ற பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்புபவர்கள் மீது நான் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

    Next Story
    ×