என் மலர்
விளையாட்டு

ஆசிய ரக்பி: இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி
- அரையிறுதியில் இந்தியா 17-0 என சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
- இறுதிப் போட்டியில் கஜகஸ்தானிடம் 27-0 என தோல்வியடைந்தது.
13 நாடுகள் பங்கேற்ற ஆசிய ரக்ஃபி எமிரேட்ஸ் ஆண்கள் செவன்ஸ் டிராபி 2025 தொடர் ஓமனில் நேற்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா 17-0 என சவுதி அரேபியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் கஜஸ்தானை எதிர்கொண்டது. இதில் கஜகஸ்தான் 27-0 இந்தியாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான போட்டியில் ஆப்கானிஸ்தான் 17-12 என சவுதி அரேபியாவை வீழ்த்தியது.
Next Story






