என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை திடீரென ஒத்திவைத்தது ஆஸ்திரேலியா
Byமாலை மலர்5 Nov 2021 6:09 AM GMT (Updated: 5 Nov 2021 6:09 AM GMT)
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்கள் கிரிக்கெட் அணியை தடை செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் மோதியதில்லை. முதல் முறையாக இரு அணிகளுக்கும் இடையே ஹோபர்ட் நகரில் இந்த மாதம் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டது.
இப்பேட்டியைக் காண ஆப்கானிஸ்தான் ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், இந்த போட்டியை ஆஸ்திரேலியா ஒத்தி வைத்துள்ளது. தலிபான்களே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் வசம் போய் விட்டது. கிரிக்கெட் விளையாட்டுக்கு உதவி செய்ய மாட்டோம் என்று ஏற்கனவே தலிபான்கள் கூறி விட்டார்கள். பெண்கள் கிரிக்கெட் அணியை தடை செய்யப் போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டுகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என தலிபான் மூத்த தலைவர் கூறினர்.
இதையடுத்தே ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா ஒத்தி வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் கூறுகையில், பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் தடை விதித்தால் அந்த நாட்டுடன் கிரிக்கெட் விளையாடுவதில் அர்த்தம் இல்லை. இதனால்தான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஹோபர்ட் டெஸ்ட் போட்டியை தள்ளி வைத்துள்ளோம் என்றனர். ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தடை விதித்தால், அந்த நாட்டு அணியுடனான டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய விரும்புவதாகவும் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதற்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாலியம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X