என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ் சுண்டப்பட்ட காட்சி
    X
    டாஸ் சுண்டப்பட்ட காட்சி

    டிஎன்பிஎல் கிரிக்கெட்... டாஸ் வென்ற திருச்சி வாரியார்ஸ் முதலில் பேட்டிங்

    டிஎன்பிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியார்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
    சென்னை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில், ரூபி திருச்சி வாரியார்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அமித் சாத்விக், முகுந்த் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

    திருச்சி அணி வீரர்கள்: ஆதித்ய கணேஷ் (விக்கெட் கீப்பர்), முகுந்த், சுமந்த் ஜெயின், அமித் சாத்விக், அந்தோணி தாஸ், நிதிஷ் ராஜகோபால், மதிவாணன், சுனில் சாம், ரகில் ஷா (கேப்டன்), ஆகாஷ் சம்ரா, சரவண் குமார்.

    கோவை அணி வீரர்கள்: கங்கா ஸ்ரீதர் ராஜு, கவின் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அஷ்வின் வேங்கடராமன், ஷாருக் கான் (கேப்டன்), முகிலேஷ், அபிஷேக் தன்வார், செல்வ குமரன், அஜித் ராம், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ், இளங்கோவன் சீனிவாசன்.
    Next Story
    ×