என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய சீனியர் கைப்பந்து இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு தகுதி பெறுமா?: கேரளாவுடன் இன்று மோதல்
Byமாலை மலர்9 Jan 2019 9:33 AM GMT (Updated: 9 Jan 2019 9:33 AM GMT)
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 67-வது தேசிய சீனியர் கைப்பந்து தொடரின் அரையிறுதியில் தமிழ்நாடு - கேரளா பலப்பரீட்சை நடத்துகின்றன.
67-வது தேசிய சீனியர் கைப்பந்து தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடகா 23-25, 25-18, 25-21, 25-20 என்ற கணக்கில் அரியானாவை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் 25-27, 25-18, 25-23, 17-25, 15-12 என்ற கணக்கில் ரெயில்வேயை போராடி வீழ்த்தியது. ‘ஏ’ பிரிவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய 4 அணிகள்தான் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. ‘பி’ பிரிவில் உள்ள ரெயில்வே, சர்வீசஸ், அரியானா, ஆந்திரா ஆகிய அணிகள் கால்இறுதியில் தோற்று வெளியேறின.
இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் அரை இறுதியில் தமிழ்நாடு- கேரளா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் கேரளாவிடம் தோற்று இருந்தது. இதனால் அதற்கு பதிலடி கொடுத்து தமிழக அணி இறுதிப்போட்டிக்கு நுழையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த முறையும் அரைஇறுதியில் கேரளாவிடம் தோற்று இருந்தது. அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் தமிழக அணி உள்ளது. அதே நேரத்தில் கேரள அணி நம்பிக்கையுடன் தமிழகத்தை எதிர்கொள்ளும். மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பெண்கள் பிரிவு கால்இறுதியில் தமிழ்நாடு 25-21, 15-25, 25-27, 20-25 என்ற கணக்கில் மராட்டியத்திடம் தோற்றது. இன்று மாலை நடைபெறும் அரைஇறுதியில் ரெயில்வே- மராட்டியம், கேரளா- மேற்கு வங்காளம் அணிகள் மோதுகின்றன.
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் 25-27, 25-18, 25-23, 17-25, 15-12 என்ற கணக்கில் ரெயில்வேயை போராடி வீழ்த்தியது. ‘ஏ’ பிரிவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய 4 அணிகள்தான் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளன. ‘பி’ பிரிவில் உள்ள ரெயில்வே, சர்வீசஸ், அரியானா, ஆந்திரா ஆகிய அணிகள் கால்இறுதியில் தோற்று வெளியேறின.
இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் அரை இறுதியில் தமிழ்நாடு- கேரளா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி ஏற்கனவே ‘லீக்’ ஆட்டத்தில் கேரளாவிடம் தோற்று இருந்தது. இதனால் அதற்கு பதிலடி கொடுத்து தமிழக அணி இறுதிப்போட்டிக்கு நுழையுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த முறையும் அரைஇறுதியில் கேரளாவிடம் தோற்று இருந்தது. அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் தமிழக அணி உள்ளது. அதே நேரத்தில் கேரள அணி நம்பிக்கையுடன் தமிழகத்தை எதிர்கொள்ளும். மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
பெண்கள் பிரிவு கால்இறுதியில் தமிழ்நாடு 25-21, 15-25, 25-27, 20-25 என்ற கணக்கில் மராட்டியத்திடம் தோற்றது. இன்று மாலை நடைபெறும் அரைஇறுதியில் ரெயில்வே- மராட்டியம், கேரளா- மேற்கு வங்காளம் அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X