search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுத்தாம்டன் டெஸ்ட் : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
    X

    சவுத்தாம்டன் டெஸ்ட் : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

    சவுத்தாம்டனில் இன்று தொடங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #INDvsENG
    லண்டன் :

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் 31 ரன் வித்தியாசத்திலும், லண்டனில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    தொடர்ந்து, நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜியில் நடந்த 3-வது டெஸ்டில் 203 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது.

    பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தியா தரப்பில் 3-வது டெஸ்டில் விளையாடிய அணியே மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இந்த போட்டியிலும் களம் இறங்குகிறது. கடந்த போட்டியில் காயம் அடைந்த அஸ்வின் குணமடைந்துவிட்டதாக கூறிய கோலி கடந்த போட்டியை போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி தரப்பில் காயம் காரணமாக வோக்ஸ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர் சாம் குர்ரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கேப்டன் ஜோ ரூட் தெரிவித்தார்.

    இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம். முடியாத பட்சத்தில் ‘டிரா’ செய்ய முயற்சிப்பர். இங்கிலாந்தும் வெற்றி பெற முடியாவிட்டாலும் அந்த அணி ‘டிரா’ செய்தால் தொடரை இழக்காமல் பார்த்துக் கொள்ளும். எனவே, இந்த டெஸ்டில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. #INDvsENG
    Next Story
    ×