search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டுப் போட்டி - குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்
    X

    ஆசிய விளையாட்டுப் போட்டி - குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா ஏழாவது தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது. #TejinderpalSinghToor #AsianGames
    ஜகர்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இன்று ஒரே நாளில் ஸ்குவாஷ் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

    இந்நிலையில்,  இன்றிரவு குண்டு எறிதலில் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி புதிய சாதனை படைத்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் மேலும் ஒரு தங்கம் வென்று இந்தியாவுக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தின் எண்ணிக்கையை ஏழாக உயர்த்தியுள்ளார். #TejinderpalSinghToor  #AsianGames
    Next Story
    ×