என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிடில் பகுதியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பில் நாங்கள் திணறி விட்டோம்- கிறிஸ் வோக்ஸ்
Byமாலை மலர்19 Aug 2018 10:54 AM GMT (Updated: 19 Aug 2018 10:54 AM GMT)
மதிய உணவு இடைவேளைக்கு முன் 3 விக்கெட் வீழ்த்திய நாங்கள் மத்தியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்து விட்டோம் என கிறிஸ் வோக்ஸ் கூறினார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்திருந்தது.
இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. 3 விக்கெட்டுக்களையும் கிறிஸ் வோக்ஸ்தான் வீழ்த்தினார்.
அதன்பின் விராட் கோலியுடன் துணைக் கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 2-வது செசன் முழுவதும் விளையாடினார்கள். இது இங்கிலாந்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தது. இந்நிலையில் முதல்நாள் ஆட்டம் மிடில் பகுதியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பில் நாங்கள் திணறி விட்டோம் என்று கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘முதல் நாள் முழுவதும் பந்து மூவ் ஆனது. ஆனால், நாங்கள் மிடில் பகுதியில் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க திணறி விட்டோம்.
டாஸ் வென்று முதலில் பந்து வீசும்போது, இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது. 3 விக்கெட்டுக்களையும் கிறிஸ் வோக்ஸ்தான் வீழ்த்தினார்.
அதன்பின் விராட் கோலியுடன் துணைக் கேப்டன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் 2-வது செசன் முழுவதும் விளையாடினார்கள். இது இங்கிலாந்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்தது. இந்நிலையில் முதல்நாள் ஆட்டம் மிடில் பகுதியில் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பில் நாங்கள் திணறி விட்டோம் என்று கிறிஸ் வோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் கூறுகையில் ‘‘முதல் நாள் முழுவதும் பந்து மூவ் ஆனது. ஆனால், நாங்கள் மிடில் பகுதியில் சிறப்பாக பந்து வீசி நெருக்கடி கொடுக்க திணறி விட்டோம்.
டாஸ் வென்று முதலில் பந்து வீசும்போது, இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X