என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கால்பந்து வீரரின் வாரிசை சுமந்தால் பரிசு- சர்ச்சையை ஏற்படுத்திய ரஷிய உணவகம்
Byமாலை மலர்22 Jun 2018 4:22 AM GMT (Updated: 22 Jun 2018 8:21 AM GMT)
ரஷியாவில் கால்பந்து வீரரின் வாரிசை சுமந்தால் பரிசு என அந்நாட்டு உணவகம் ஒன்று அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #FifaWorldCup2018
மாஸ்கோ:
ரஷியாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு பெண்களுக்கு வினோதமான பரிசு அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டது. அதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மூலம் கர்ப்பமடைந்து வாரிசை சுமக்கும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் ரொக்கப்பரிசும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ‘பர்கர்’ உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வருங்கால ரஷிய கால்பந்து அணிக்கு சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து இணையதளங்களில் பகிரங்கமாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தனது பரிசு அறிவிப்பை வாபஸ் பெற்றதுடன், மக்களிடம் மன்னிப்பும் கோரி இருக்கிறது. அத்துடன் தங்களது அறிவிப்பு விளம்பரங்களையும் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கியது. #FifaWorldCup2018
ரஷியாவில் உள்ள துரித உணவகம் ஒன்று அந்த நாட்டு பெண்களுக்கு வினோதமான பரிசு அறிவிப்பு ஒன்றை அதிரடியாக வெளியிட்டது. அதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மூலம் கர்ப்பமடைந்து வாரிசை சுமக்கும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் ரொக்கப்பரிசும், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ‘பர்கர்’ உணவு இலவசமாக வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வருங்கால ரஷிய கால்பந்து அணிக்கு சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து இணையதளங்களில் பகிரங்கமாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு பெண்கள் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தனது பரிசு அறிவிப்பை வாபஸ் பெற்றதுடன், மக்களிடம் மன்னிப்பும் கோரி இருக்கிறது. அத்துடன் தங்களது அறிவிப்பு விளம்பரங்களையும் உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கியது. #FifaWorldCup2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X