search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மங்கோலியா குத்துச்சண்டை - காலிறுதியில் ஷிவா தபா, சல்மான் ஷேக்
    X

    மங்கோலியா குத்துச்சண்டை - காலிறுதியில் ஷிவா தபா, சல்மான் ஷேக்

    மங்கோலியாவில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் ஷிவா தபா, சல்மான் ஷேக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
    மங்கோலியாவில் உலான்பாட்டார் கோப்பை குத்துச்சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 60 கிலோ எடைப்பிரிவில் ஷிவா தபா கலந்து கொண்டார். இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பியாவின் ஒயுன்பிலெக் முங்க்சைகானை எதிர்கொண்டார். இதில் ஷிவா தபா எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    அதேபோல் 52 கிலோ எடைப்பிரிவில் சல்மான் சேக் கொரியாவின் யங் சிக் பயே-வை எதிர்கொண்டார். இதில் சல்மான் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் ஷிவா தபா கிர்கிஸ்தான் வீரர் ரவ்ஷன்பெக்கையும், சல்மான் உள்ளூர் வீரரான காங்குயக் கான்-எர்டேனை எதிர்கொள்கிறார்.
    Next Story
    ×