search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்துச்சண்டை- இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
    X

    குத்துச்சண்டை- இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

    ரஷியாவில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை தொடரில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள்.
    ரஷியாவின் கஸ்பிஸ்க் நகரில் உமாகாநோவ் மெமோரியல் குத்துச் சண்டை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 81 கிலோ எடைப்பிரிவில் பிரிஜேஷ் யாதவ், 91 கிலோ எடைப்பிரிவில் விரேந்தர் குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் பிரிவில் 75 கிலோ எடைப்பிரிவில் சவீட்டி பூரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஷஷி சோப்ரா (57 கிலோ), பிங்கி ஜங்ரா (51 கிலோ), பவித்ரா (60) அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றனர்.

    ஆண்கள் பிரிவில் கவுரவ் பிதுரி அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார்.
    Next Story
    ×