என் மலர்
செய்திகள்

டோனி பாஃர்ம் குறித்து கவலையில்லை: வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்- ஸ்மித் நம்பிக்கை
டோனி பேட்டிங் பாஃர்ம் குறித்து கவலையில்லை. வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டோனி பேட்டிங் பாஃர்ம் குறித்து கவலையில்லை. வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என்று ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி கேப்டன் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இந்தியாவின் சாதனைக் கேப்டன் மகேந்திர சிங் டோனி இடம்பிடித்துள்ளார். இதுவரை புனே அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
மூன்று போட்டிகளிலும் டோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை. முதல் போட்டியில் 12 பந்தில் 12 ரன்னும், 2-வது போட்டியில் 11 பந்தில் 5 ரன்னும், 3-வது போட்டியில் 14 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரது பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்தது.
ஆனால், புனே அணியின் கேப்டன் ஸ்மித் டோனியின் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார். டோனியின் பேட்டிங் குறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘டோனியின் பாஃர்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். இந்த தொடரில் மீதமுள்ள போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார்’’ என்றார்.
ஐ.பி.எல். சீசன் 10 டி20 கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இந்தியாவின் சாதனைக் கேப்டன் மகேந்திர சிங் டோனி இடம்பிடித்துள்ளார். இதுவரை புனே அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற புனே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.
மூன்று போட்டிகளிலும் டோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை. முதல் போட்டியில் 12 பந்தில் 12 ரன்னும், 2-வது போட்டியில் 11 பந்தில் 5 ரன்னும், 3-வது போட்டியில் 14 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் அவரது பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்தது.
ஆனால், புனே அணியின் கேப்டன் ஸ்மித் டோனியின் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்துள்ளார். டோனியின் பேட்டிங் குறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘டோனியின் பாஃர்ம் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர் ஒரு தலைசிறந்த வீரர். நாங்கள் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். இந்த தொடரில் மீதமுள்ள போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார்’’ என்றார்.
Next Story






