search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மாவுக்கு போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் எச்சரிக்கை
    X

    ரோகித் சர்மாவுக்கு போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் எச்சரிக்கை

    கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடுவர் அளித்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா நடுவரை நோக்கி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
    மும்பை :

    மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் இருக்கையில் சுனில் நரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

    மைதான நடுவர் நந்தன் அளித்த இந்த தீர்ப்பால் கடும் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா நடுவரை நோக்கி திட்டியபடி பெவிலியன் திரும்பினார். இது குறித்து விசாரணை நடத்திய போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் ரோகித் சர்மாவின் செயலுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து போட்டி நடுவர் முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×