என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோரூட் அவுட் சர்ச்சை: மேட்ச் நடுவரிடம் இங்கிலாந்து முறையீடு
Byமாலை மலர்30 Jan 2017 7:09 AM GMT (Updated: 30 Jan 2017 7:17 AM GMT)
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜோரூட் அவுட் சர்ச்சை குறித்து போட்டி நடுவரிடம் தெரிவிக்க உள்ளதாக இங்கிலாந்து அணி கேப்டன் தெரிவித்தார்.
நாக்பூர்:
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 139 ரன்களே எடுத்தது.
பரபரப்பான ஆட்டத்தின் கடைசி ஒவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா அந்த ஓவரை சிறப்பாக வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் (ஜோருட், பட்லர்) சாய்த்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில், கடைசி ஓவரில் ஜோரூட் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. பும்ரா வீசிய முதல் பந்தில் அவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ கொடுத்தார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து பேட்டில் பட்டு தான் காலில் விழுந்தது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே டிஆர்எஸ் முறையை பயன்படுத்திவிட்டதால், இப்போட்டியில் அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.
எனவே, நடுவரின் இந்த முடிவால் இங்கிலாந்து கேப்டன் மார்கன் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தார். இதுகுறித்து மேட்ச் நடுவரிடம் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
‘அடுத்த போட்டிக்கு முன்னதாக நடுவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வழக்கமாக, போட்டி முடிந்ததும் நடுவர் மூலம், எங்கள் கருத்துகக்ள் அடங்கிய அறிக்கையை வழங்குவோம். இந்த முறை, ஜோரூட்டின் சர்ச்சைக்குரிய அவுட் குறித்தும் அதில் பதிவு செய்வோம்’ என்றார் மார்கன்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 139 ரன்களே எடுத்தது.
பரபரப்பான ஆட்டத்தின் கடைசி ஒவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா அந்த ஓவரை சிறப்பாக வீசி, வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் (ஜோருட், பட்லர்) சாய்த்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில், கடைசி ஓவரில் ஜோரூட் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. பும்ரா வீசிய முதல் பந்தில் அவருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ கொடுத்தார். ஆனால் டெலிவிசன் ரீபிளேயில் பந்து பேட்டில் பட்டு தான் காலில் விழுந்தது தெளிவாக தெரிந்தது. ஏற்கனவே டிஆர்எஸ் முறையை பயன்படுத்திவிட்டதால், இப்போட்டியில் அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.
எனவே, நடுவரின் இந்த முடிவால் இங்கிலாந்து கேப்டன் மார்கன் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தார். இதுகுறித்து மேட்ச் நடுவரிடம் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
‘அடுத்த போட்டிக்கு முன்னதாக நடுவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வழக்கமாக, போட்டி முடிந்ததும் நடுவர் மூலம், எங்கள் கருத்துகக்ள் அடங்கிய அறிக்கையை வழங்குவோம். இந்த முறை, ஜோரூட்டின் சர்ச்சைக்குரிய அவுட் குறித்தும் அதில் பதிவு செய்வோம்’ என்றார் மார்கன்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X