search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்ற வாலிபர்கள்
    X

    பெண் கிடைக்க வேண்டி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற வாலிபர்கள்

    திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்ற வாலிபர்கள்

    • விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
    • தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக வாலிபர்கள் கூறினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டுலுபேட் கோடஹள்ளி கிராமத்தில், விவசாயம் செய்யும் வாலிபர்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைப்பது இல்லை. விவசாயி என்பதால் வாலிபர்களுக்கு பெண் கொடுக்க, பெண் வீட்டார் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி, கோடஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கிராமத்தில் இருந்து, 160 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் மலையில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டும் என்றும் வேண்டி, பாத யாத்திரை செல்வதாக கூறினர்.

    சில மாதங்களுக்கு முன்பு, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள், திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி மலை மாதேஸ்வரா கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற நிலையில் தற்போது சாம்ராஜ்நகர் மாவட்டம் கோடஹள்ளி கிராமத்தில் இருந்தும் வாலிபர்கள் பாத யாத்திரை சென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×