search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விநாயகர் ஊர்வலத்தில் நடனமாடியதை தட்டிக்கேட்ட மனைவி கொலை: கணவர் வெறிச்செயல்
    X

    விநாயகர் ஊர்வலத்தில் நடனமாடியதை தட்டிக்கேட்ட மனைவி கொலை: கணவர் வெறிச்செயல்

    • இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார்.
    • நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அபர்ணா (வயது 35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அபர்ணா தனது கணவருடன் தலித்வாடா கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அன்று மாலை நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பிரபு கலந்து கொண்டு நடனம் ஆடியபடி சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் பிரபுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த தகவல் பிரபுவின் மனைவி அபர்ணாவிற்கு தெரிய வந்தது.

    இரவு வீட்டிற்கு வந்த கணவரிடம் அபர்ணா ஏன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தகராறு செய்தாய் என தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது அபர்ணாவின் தாய் மகளுக்கு சாதகமாக பேசியதால் பிரபு அவமானமாக கருதினார். அருகில் இருந்தவர்கள் கணவன் மனைவியை சமாதானம் செய்து வைத்தனர்.

    அபர்ணாவின் தாய் வீட்டிற்கு வெளியே தூங்கினார். கணவன் மனைவி இருவரும் வீட்டில் உள்ள அறையில் தூங்கினர்.

    நள்ளிரவில் பிரபு அபர்ணா தலையில் கல்லை தூக்கிபோட்டார். இதில் அபர்ணா துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×