என் மலர்
இந்தியா

அசாமில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 14 பேர் பலி
- அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
- பஸ் டெர்கான் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நிலக்கரி லாரி பயங்கரமாக மோதியது.
அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45 பேர் இருந்தனர். சுற்றுலா சென்று விட்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பஸ் டெர்கான் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நிலக்கரி லாரி பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த 14 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Next Story






