என் மலர்
இந்தியா

மனைவியுடன் பைக்கில் சென்ற புது மாப்பிள்ளை கொலை
- இடுக்க நெல்லூர் என்ற இடத்தில் வந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இவர்களது பைக்கை 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.
- தாமோதரை இழுத்து கீழே தள்ளி கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அனுராதா அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருவ பத்தலாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாமோதர் (வயது 24). இருவரும் பினுகூறு பகுதியை சேர்ந்த அனுராதா (20) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி தம்பதியினர் இருவரும் அனுராதா வீட்டிற்கு பைக்கில் சென்றனர்.
பின்னர் நேற்று இரவு 10 மணியளவில் இருவரும் பைக்கில் வந்து கொண்டு இருந்தனர். இடுக்க நெல்லூர் என்ற இடத்தில் வந்த போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இவர்களது பைக்கை 3 பேர் கும்பல் வழிமறித்தனர்.
அவர்கள் பைக்கில் இருந்த தாமோதரை இழுத்து கீழே தள்ளி கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அனுராதா அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
Next Story






