search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓடும் ரெயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்து டிஸ்மிஸ்
    X

    ஓடும் ரெயிலில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்து டிஸ்மிஸ்

    • டிக்கெட் பரிசோதகர் மீது பெண் வன்கொடுமை மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டது ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்னவ் உத்தரவிட்டார்.

    புதுடெல்லி:

    கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரசுக்கு கடந்த 12-ந்தேதி அகல்தத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக முன்னா குமார் என்பவர் பணியில் இருந்தார். அன்று நள்ளிரவு ரெயில் உத்தரபிரதேசம் அக்பர்பூர் பகுதியில் சென்ற போது முன்னா குமார், தனது கோச்சில் இருந்த பெண் பயணி ஒருவரின் தலையில் சிறுநீர் கழித்தார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுபற்றி சார்பெக் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் டிக்கெட் பரிசோதகர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டது ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் டிக்கெட் பரிசோதகர் முன்னா குமாரை உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்னவ் உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, இப்பிரச்சினையை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்களை பொறுத்து கொள்ளவும் முடியாது. எனவே அவர் பணியில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுகிறார், என்றார்.

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்னவின் நடவடிக்கை ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×