search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தானே அருகே 17 வயது சிறுமியை ஒரு மாதமாக மிரட்டி கற்பழித்த டெய்லர்
    X

    தானே அருகே 17 வயது சிறுமியை ஒரு மாதமாக மிரட்டி கற்பழித்த டெய்லர்

    • டெய்லர் வழக்கம் போல சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
    • டெய்லரின் குட்டு அம்பலமானது.

    மும்பை:

    தானே தைகர் பகுதியில் மதராசாவில் சமையல் வேலை பார்க்கும் பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன் சமையல்கார பெண்ணின் கணவரே, 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மகளை பாதுகாப்பாக வளர்க்க விரும்பினார். எனவே அவர் தினமும் வேலைக்கு செல்லும் போது மகளை வீட்டில் அடைத்து வைத்து பூட்டிச்செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் சமையல்கார பெண், மகளை வீட்டில் பூட்டி வைத்து சாவியை அருகில் வசித்து வரும் டெய்லரிடம் கொடுத்துவிட்டு செல்ல தொடங்கினார். கடந்த நவம்பர் மாதம் இந்த சிறுமி தையல்கடைக்கு சென்றபோது, அந்த டெய்லர் பாலியல் தொல்லை கொடுத்ததும், இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

    இது தெரியாமல் சமையல்கார பெண் அந்த திருட்டு டெய்லரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார். இது டெய்லருக்கு சாதகமாக அமைந்தது.

    சமையல்கார பெண் வேலைக்கு செல்லும் வேளையில், அவர் ஒரு மாதத்துக்கு மேலாக வீட்டில் பூட்டி வைக்கப்பட்டு இருந்த சிறுமியை மிரட்டி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து இருக்கிறார். ஏற்கனவே காமூக தந்தையால் வீட்டில் அடைப்பட்டு கிடப்பதால், இந்த கொடுமையை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் சிறுமி தவித்தார். ஒருநாள் டெய்லரின் அத்துமீறல்களை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று டெய்லர் வழக்கம் போல சிறுமியை அவரது வீட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால் வர மறுத்ததால் சிறுமியை இழுத்து சென்றுள்ளார். இதைப்பார்த்த பக்கத்து வீட்டு பெண் ஒருவர் டெய்லரை கண்டித்தார். அப்போது சிறுமி தைரியத்தை வரவழைத்து தனக்கு ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த அவலம் குறித்து பக்கத்துவீட்டு பெண்ணிடம் கூறினார். மேலும் செல்போனில் பதிவு செய்து வைத்து இருந்த வீடியோவையும் காட்டினார்.

    இதையடுத்து டெய்லரின் குட்டு அம்பலமானது. அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளுடன் சென்று போலீசில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் போக்சோ, பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டெய்லர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×