என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மொழியின் அடிப்படையில் இளைஞர்களின் திறமைகளை மதிப்பிடுவது அநீதி- பிரதமர் மோடி பேச்சு
- பாரம்பரிய அறிவு அமைப்புகளுக்கும், எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் சம முக்கியத்துவம் அளித்து உள்ளது.
- புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளுக்காக இந்தியாவை உலகம் பார்க்கிறது.
புதுடெல்லி:
அகில பாரதிய சிக்ஷா சமாஜம் மாநாடு டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:-
இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை தேசிய கல்வி கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. பாரம்பரிய அறிவு அமைப்புகளுக்கும், எதிர்கால தொழில்நுட்பத்திற்கும் சம முக்கியத்துவம் அளித்து உள்ளது. இளைஞர்களின் திறமையை விட அவர்களின் மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும். தேசிய கல்வி கொள்கை, பயிற்சியை வழங்குவதுடன் அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.
புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளுக்காக இந்தியாவை உலகம் பார்க்கிறது. பல நாடுகள், அங்கு ஐ.ஐ.டி. வளாகங்களை திறக்க எங்களை அணுகுகின்றன. நாட்டின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு. இலக்கை நோக்கி நாடு முன்னேறி செல்வதில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு. பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம், சுத்தமான எரிசக்தி ஆகியவை குறித்த விழிப்புணர்வு பாடங்களை மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்