என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத்தில் இருந்து வந்த சென்னை ரெயிலில் திடீர் புகை- பயணிகள் அலறி அடித்து ஓட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அகமதாபாத்தில் இருந்து வந்த சென்னை ரெயிலில் திடீர் புகை- பயணிகள் அலறி அடித்து ஓட்டம்

    • ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புகை வந்த பெட்டியில் இருந்து தீயை அணைத்தனர்.
    • பயணிகள் ரெயிலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி நின்றனர்.

    திருப்பதி:

    அகமதாபாத்தில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.

    தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ள பெட்டியின் அருகில் பிரேக் லைனரில் இருந்து திடீரென புகை வந்தது. ரெயில் பெட்டியில் இருந்து புகை வந்ததை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் மகபூபாபாத் ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பயணிகள் ரெயிலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி நின்றனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புகை வந்த பெட்டியில் இருந்து தீயை அணைத்தனர். மேலும் பிரேக் லைனரில் ஏற்பட்ட பழுதை நீக்கி சரி செய்தனர்.

    இதனால் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னைக்கு புறப்பட்டு வந்தது.

    இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×