search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு கராத்தே பயிற்சி அளித்த வக்கீல் கைது
    X

    பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு கராத்தே பயிற்சி அளித்த வக்கீல் கைது

    • பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள், அமைப்புடன் தொடர்புடைய துணை குழுக்களின் அலவலகங்கள் என 56 இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
    • பல முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். அது தொடர்பான விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.

    தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதையடுத்து கடந்த 29-ந்தேதி கேரளாவில் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பின் அலுவலகங்கள், அமைப்புடன் தொடர்புடைய துணை குழுக்களின் அலவலகங்கள் என 56 இடங்களில் மீண்டும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் பல முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். அது தொடர்பான விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினருக்கு கராத்தே, குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்றுவித்த முகமது முபாரக் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்.

    அவரிடம் சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பிறகு முகமது முபாரக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கைதான முகமது முபாரக் வக்கீல் ஆவார். கேரள ஐகோர்ட்டில் அவர் வக்கீலாக உள்ளார்.

    Next Story
    ×