என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆந்திராவில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முக்கு ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு ஆதரவு
- ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று காலை விமானம் மூலம் விஜயவாடா வந்தடைந்தார்.
- ஜெகன்மோகன் ரெட்டி, திரவுபதி முர்முவுக்கு தேநீர் விருந்து வழங்கினார்.
திருப்பதி:
பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அரசியல் கட்சியினர் இடையே ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று காலை விமானம் மூலம் விஜயவாடா வந்தடைந்தார். அங்குள்ள தனியார் ஓட்டலில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அவருக்கு தன்னுடைய எம்.எல்.ஏக்கள் 152 பேரும், 23 எம்.பிக்களும் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி, திரவுபதி முர்முவுக்கு தேநீர் விருந்து வழங்கினார்.
இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, திரவுபதி முர்மு சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது தன்னுடைய 23 எம்.எல்.ஏக்கள், 3 எம்.பிக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
அரசியலில் எதிரும், புதிரமாக உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு இருவரும் பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என தெரிவித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்