என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஜம்மு காஷ்மீரில் குக்கர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு- மிகப்பெரிய சதிதிட்டம் முறியடிப்பு
- குக்கர் வெடிகுண்டு மூலமாக மிகப்பெரிய சதி திட்டத்துக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
- குக்கர் வெடிகுண்டு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் பகுதி போலீசாரும், ராணுவத்தினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராணுவத்தில் செயல்பட்டு வரும் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர், காவல்துறையினருடன் இணைந்து கூட்டாக மேற்கொண்ட இந்த அதிரடி சோதனையில் அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர் வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது.
ஷோபியான் பகுதியில் இமாம் சாஹிப் என்ற இடத்தில் ராணுவ படையினர் இந்த குக்கர் குண்டை கண்டு பிடித்தனர்.
இதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களின் உதவியுடன் குக்கரை திறந்து பார்த்த போது அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்து வெடிகுண்டை செயல் இழக்க செய்தனர்.
குக்கர் வெடிகுண்டு மூலமாக மிகப்பெரிய சதி திட்டத்துக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. குக்கர் வெடிகுண்டு சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் ராணுவ படையினர் வெடிகுண்டை கண்டு பிடித்து செயல் இழக்க வைத்ததால் மிகப்பெரிய நாசவேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்து சிதறி சில நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் குக்கர் வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மினி பஸ்சை மறித்து போலீசார் சோதனை செய்ததில் வெடிகுண்டு ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மினி பஸ், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்