search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜோஷிமத் நகருக்கு 1976-லேயே விடப்பட்ட எச்சரிக்கை
    X

    ஜோஷிமத் நகருக்கு 1976-லேயே விடப்பட்ட எச்சரிக்கை

    • ஜோஷிமத் நிலச்சரிவு ஏற்படும் அபாய பகுதியில் இருக்கிறது என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர்.
    • ஜோஷிமத் கிராமத்தில் அதிக கட்டுமானங்களும், நீர் மின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

    ஜோஷிமத் நிலச்சரிவு ஏற்படும் அபாய பகுதியில் இருக்கிறது என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். இந்த நகரின் புவியியல் அமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. எனவே இங்கு வசிப்பது மிகவும் ஆபத்தானது என்று கடந்த 1976-ம் ஆண்டு முதல் புவியியலாளர்கள் எச்சரித்து இருந்தனர்.

    எனவே இங்கு அதிகஅளவிலான கட்டுமானங்கள் மற்றும் மக்கள் குடியேறுவதை அனுமதிக்க கூடாது என்று கூறியிருந்தனர். ஆனால் இப்போது ஜோஷிமத் கிராமத்தில் அதிக கட்டுமானங்களும், நீர் மின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டன. இது நிலையை மோசமாக்கிய நிலையில் இங்கு ஓடும் சிற்றோடைகளின் அரிப்பும் ஜோஷிமத் கிராமத்தின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

    Next Story
    ×