என் மலர்
இந்தியா

அந்தமானில் நிலநடுக்கம்: வீடு-கட்டிடங்கள் குலுங்கியது
- நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது.
- நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
போர்ட்பிளேயர்:
அந்தமான்-நிகோபார் போர்ட் பிளேயரில் இருந்து 126 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தென் மேற்கு பகுதியில் நேற்று நள்ளிரவு 12.53 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 5.9 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.
Next Story






