என் மலர்
இந்தியா

சி.பி.ஐ. அதிகாரிகள் வேடத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளை
- 3 வாகனங்களில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறினார்கள்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் வேடத்தில் கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் பொவானிப்பூரில் உள்ள ரூப்சந்த் முகர்ஜி லேன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் வாத்வா (வயது 60). தொழில் அதிபர்.
இவரது வீட்டுக்கு 3 வாகனங்களில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறினார்கள்.
பின்னர் அவர்கள் அங்கு சோதனை என்ற பெயரில் ரூ.30 லட்சம் பணம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து சுரேஷ் வாத்வா பொவானிப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.பி.ஐ. அதிகாரிகள் வேடத்தில் கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருகிறார்கள்.
Next Story