என் மலர்
இந்தியா

ஆந்திர மது அணுகுண்டை விட ஆபத்தானது- புரந்தேஸ்வரி பேச்சு
- ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டார்.
- ஆந்திராவில் மது விற்பனையில் ஊழல் நடக்கிறது.
திருப்பதி:
ஆந்திராவில் நடந்த கூட்டத்தில் அந்த மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி பேசியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் மது அருந்துவதால் ஒரு நாளைக்கு குறைந்தது 700 முதல் 1000 இறப்புகள் ஏற்படுகின்றன.
அணுகுண்டின் வீரியத்தை மிஞ்சும் வகையில் மது ஆபத்தானது. ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டார்.
மது விற்பனை பயங்கரவாத செயல். ஆந்திராவில் மது விற்பனையில் ஊழல் நடக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






