என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
விண்வெளி வீரராக கலக்கும் ஆந்திர இளம்பெண்
- விண்வெளி சுற்றுலா பயணத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு முதல் பலரும் பாராட்டியுள்ளனர்.
- ராக்கெட் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியவுடன் இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர் சிரிஷா பண்ட்லா (வயது 34). இவர் தற்போது அமேரிக்காவில் வசித்து வருகிறார்.
பிரிட்டன் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சலுடன் விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தில், விண்வெளிக்குச் சென்று திரும்பிய சிரிஷா பண்ட்லாவை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கல்பன சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசையில் தற்போது விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனையாக சிரிஷா பண்ட்லா திகழ்கிறார்.
இவரது விண்வெளி சுற்றுலா பயணத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு முதல் பலரும் பாராட்டியுள்ளனர்.
இவர்களில் கல்பனா சாவ்லா இந்தியாவின் ஹரியானாவிலும், சிரிஷா ஆந்திர மாநிலத்தின் குண்டூரிலும் பிறந்திருந்தாலும், அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டு குடியுரிமையை பெற்றவர்கள்.
சுனிதாவின் ஆணிவேர் இந்தியாவில் இருந்தாலும் அவர் அமெரிக்காவிலேயே பிறந்தவர்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்குப் பறந்த ராக்கெட், ஒரு மணி நேரத்தில் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது.
வரலாற்று பூர்வ பயணத்தில் சிரிஷா பண்ட்லா இடம்பெற்றது இந்தியாவில், குறிப்பாக அவர் பிறந்த ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராக்கெட் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியவுடன் இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் ஒரு சிறுமியாக வளர்ந்து வந்தேன். "எனது ஆரம்பகால நினைவுகளில் ஒன்று மின்வெட்டு, மின்தடை. என் தாத்தா பாட்டியின் கூரையில் தூங்கியது எனக்கு நினைவிருக்கிறது.
இந்தியாவில் நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதைப் பார்த்தது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. அங்கே என்ன இருக்கிறது? என்று பார்க்க ஆசைப்பட்டேன்.
பார்வைக் குறைபாடு காரணமாக நாசா விண்வெளி வீராங்கனையாக என்னால் இருக்க முடியவில்லை அதற்குப் பதிலாக என்ஜினீயர் வழியைப் பயன்படுத்தினேன்.
கடந்த ஜூலை மாதம் கோடீஸ்வரர் விர்ஜின் கேலக்டிக்கின் முதல் விண்வெளி விமானத்தில் சர் ரிச்சர்ட் பிரான்சனுடன் சென்ற குழுவில் இளம் விண்வெளி பொறியாளராக பணியாற்றினேன்.
பூமிக்கு மேலே ஏறக்குறைய 90 கிலோ மீட்டர் வரை பயணம் செய்தது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. "பூமியைப் பார்த்ததும், வளிமண்டலத்தின் மெல்லிய நீலக் கோட்டைப் பார்ப்பதும், உண்மையில் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று நினைக்க தோன்றியது.
நான் சிறு வயதிலிருந்தே விண்வெளி வீரர்கள். சந்திரனில் காலடி எடுத்து வைத்தவர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளேன். அவர்களை நான் மதிக்கிறேன்.
அவர்களின் பயணத்துடன் நான் என்னை இணைக்கவில்லை. எனது பயணத்தில் மிகவும் வித்தியாசமாக இதனை உணர்ந்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்