search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 காட்டு யானைகள் பலி
    X

    ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 காட்டு யானைகள் பலி

    • யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மின்வேலி அமைத்தனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர்

    திருப்பதி:

    ஒடிசாவில் இருந்த வந்த 6 காட்டு யானைகள் ஆந்திரம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் சுற்றித்திரிந்தன.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

    இந்நிலையில், யானைகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மின்வேலி அமைத்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை பார்வதிபுரம் அடுத்த கத்ரகெடா கிராமத்திற்குள் 6 யானைகள் புகுந்தன. உணவைத் தேடி விளைநிலங்களை நோக்கி வந்த யானைகள் மீது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் உரசியது இதில் மின்சாரம் பாய்ந்து 4 யானைகள் பலியாகின. 2 யானைகள் உயிர்தப்பின.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைகளை மீட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×