என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
துணி துவைக்க சென்றபோது 3 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி
- திருப்பத்தமா திடீரென எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனைக் கண்ட அவரது சகோதரிகள் சந்தியா, தீபிகா இருவரும் அக்காவை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகள் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், வனபர்த்தி மாவட்டம் தடிபாமுலாவை சேர்ந்தவர் கந்தம் குருமன்னா. இவருடைய மகள்கள் திருப்பத்தம்மா (வயது 12), சந்தியா (9), தீபிகா (7) ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிறுமிகள் 3 பேரும் வீரா சமுத்திரம் பகுதியில் உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றனர்.
அப்போது திருப்பத்தமா திடீரென எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். இதனைக் கண்ட அவரது சகோதரிகள் சந்தியா, தீபிகா இருவரும் அக்காவை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
அப்போது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சிறுமிகள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
அப்பகுதி வாலிபர்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 சிறுமிகளின் பிணங்களை மீட்டனர்.
சிறுமிகளின் பிணத்தைப் பார்த்து அவரது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகள் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்